Saturday, November 18, 2017

தனியார் மயம்  நோக்கி செல்லும்  அஞ்சல்துறை 
உறக்கம்  கலையுமா  தொழிற்சங்கங்கள் ?

தபால் துறையில் ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.18: 
 
சென்னையில் உள்ள தலைமை தபால் அஞ்சல் அலுவலகம் வெளி யிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத் தில் இருந்து விரைவு அஞ்சல் மற்றும் பதிவு அஞ்சலை கொண்டு சென்று வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதற்கு ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார் கள். இதற்கு எஸ்.எஸ்.எல்.சி முடித் தி ருக்க வேண் டும். கணினியை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஸ்மார்ட் செல்போனு டன் இணைய தள வசதி யும் வைத்திருக்க வேண்டும். 
 
இந்த பணிக்கு அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே தபால் துறையில் பணியாற்றுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் விண் ணப் பத்துடன் தபால் துறையில் பணியாற்றும் இரண்டு பேரிடம் பரிந்துரை கடி தத்தை பெற்று சமர்ப்பிக்க வேண் டும். இந்த பணிக்கு வரும் 27ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகங்களுக்கு 044 28520926, 65252556 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
தபால் துறை அறிவிப்பு

No comments:

Post a Comment