Tuesday, February 17, 2015

NFPE சம்மேளனம் சார்பாக கும்பகோணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இனிய  தோழர்களே ! தோழியர்களே, மாநில சங்க அறைக்கூவலுக்கு  ஏற்ப 17.2.2015 இன்று  NFPE அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS -NFPE உள்ளடக்கிய  NFPE சம்மேளனம் சார்பாக கும்பகோணம்தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 6 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தை  NFPE  P3  கோட்டச்செயலர் தோழர் பெருமாள் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகச்சிறப்பாக நடத்தினார். P3 தலைவர் தோழர்  பிரபாகரன் அவர்கள், P3 தோழர் ஜோதி அவர்கள்,  P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன்  அவர்கள், P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள், GDS NFPE தலைவர் தோழர் செல்வகுமார் அவர்கள், GDS  NFPE கோட்டச்செயலர் தோழர் தம்பிராஜ் அவர்கள்  நாம் அனுபவித்து வரும் பிரச்சனைகளை சுருக்கமாக சிறப்பாக எடுத்துக்கூறினர். 

ஆர்ப்பாட்டத்தில் மைக்ராசாப்ட் பில்கேட்ஸ்  அவர்களே இவ்வளவு நாளாக தேவையான பேண்ட் வித் இல்லாமாலே நாம் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டரை கண்டு வியந்து பாராட்டுவதாக கூறப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காட்சிகள் சில
P3  தலைவர்  தோழர்   பிரபாகரன் அவர்கள்,

P3 தோழர்  ஜோதி அவர்கள்


 GDS தலைவர்  தோழர்  செல்வகுமார் அவர்கள்
                        GDS கோட்டச்செயலர்  தோழர்  தம்பிராஜ்  அவர்கள்

  P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன் அவர்கள், 
               P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள்

                             P3  கோட்டச்செயலர் தோழர் பெருமாள் அவர்கள்
 நீண்ட நாளைக்கு பிறகு  ஆர்ப்பாட்டத்திற்கு 30க்கும் மேற்ப்பட்ட பெண் தோழியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



No comments:

Post a Comment